Thursday, June 30, 2011

நானே கேள்வி... நானே பதில்!

அண்மையில் எதைப் படித்துச் சிரித்தீர்கள்?''
'' 'ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரும் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற மன்மோகனின் உத்தரவைப் பார்த்துதான்!''
­- கிருஷ்ண பாரதி, சென்னை-91.
''ஈழப் பிரச்னையில் கருணாநிதி அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று விஜயகாந்த் குற்றம் சாட்டுகிறாரே?''
''மற்ற கட்சியினராவது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டப் பாவனைகளாவது செய்தார்கள். ஆனால், ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது விஜயகாந்த் இருந்தது 'விருத்தகிரி’ ஷூட்டிங்கில்!''
- பா.அமுதா, மதுரை.
'''ஆளைவைத்து எடை போடாதே’ என்பதற்கு உதாரணம்?''
''உப்புமா! பொதுவாக, சுமாரான படங்களை உப்புமா படங்கள் என்றும் அந்தப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை உப்புமா கம்பெனி கள் என்றும் சொல்வது வழக்கம். ஆனால், அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த சர்வதேச சமையல் கலைப் போட்டியில் கர்டோஸ் என்ற இந்தியர், உப்புமா சமைத்து முதல் பரிசு வென்று இருக்கிறார். முதல் பரிசு எவ்வளவு தெரியுமா, 50 லட்சம்!''
- கா.சங்கரி, தேனி.
''பாராட்டுவதா, இல்லையா என்று குழம்பிய விஷயம்?''
''பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சமீபத்தில் ஒரு விநோதமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், பள்ளிகளில் சேர்க்கும்போது அப்பா பெயரைப் போட முடியாததால், தன் பெயரையே அப்பா பெயராகப் போடலாம் என்று அறிவித்து இருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகள் 'அப்பா பெயரை எழுத வேண்டாம்’ என்று சொன்னால் போதுமே. எப்படியோ, இது மட்டும் நிறைவேறினால்... சர்தாரிதான் பாகிஸ்தானின் 'தேசத் தந்தை’!''
-  மணிமொழி, மதுரை.
''வாயாடிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?''
''இல்லையா பின்னே? உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. ஒரு பெண், குழாய் பழுதுபார்ப்பவருக்கு போன் செய்தாள். 'எங்க வீட்டுக் குழாய்களை இன்னிக்கு கட்டாயம் பழுது பார்த்துவிடு. நான் வீட்டில் இருக்க மாட்டேன். ஆனால், எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருக்கும். அது உன்னை ஒன்றும் செய்யாது. ஆனா ஒண்ணு, என்ன பண்ணினாலும் எங்க வீட்டுக் கிளியோட மட்டும் ஒரு வார்த்தைகூடப் பேசிடாதே’ என்று சொன்னாள்.
அவள் சொன்ன மாதிரியே அவரும் வீட்டுக்கு வந்து வேலை செய்துகொண்டு இருந்தார். அங்கே இருந்த நாய் ஒரு மூலையில் அமைதியாகப் படுத்து இருந்தது. கிளிதான் அவனை வேலை பார்க்கவிடாமல் பேசிப் பேசியே ரொம்பவும் படுத்தி எடுத்தது. அவனும் ரொம்பப் பொறுமையாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். கடைசியில் பொறுமை இழந்து போய், 'முட்டாள் கிளியே, வாயை மூடு’ என்று கத்தினான். அதற்கு அந்தக் கிளி என்ன செய்தது தெரியுமா?
'டைகர், அவனைக் கடி’ என்றது. அப்புறம் என்ன நடந்து இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?''

ஒரு டாக்டர், தன் கிளினிக் டாய்லெட் குழாய் ரிப்பேருக்காக ஒரு பிளம்பரை அழைத்தாராம். அவனும் பத்து நிமிடத்தில் ஒரு சில வாஷர்களை மாற்றிவிட்டு, சிலதை டைட் செய்து விட்டு ரூ.1000- கேட்டதும் டாக்டர் அதிர்ந்து போனாராம். " நான் எம்.பி.பி.ஸ் படிச்ச டாக்டர்...என்னாலேயே பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க முடியாது... " பிளம்பர் சொன்னான்: " நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் டாக்டர்...நான் டாக்டரா இருந்தபோது என்னாலேயும் அவ்வளவு சம்பாதிக்க முடியலை..."

No comments:

Post a Comment